Coimbatore: பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. காவல் ஆய்வாளர், மருத்துவர் நேரில் ஆஜராக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. காவல் ஆய்வாளர், மருத்துவர் நேரில் ஆஜராக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு

Coimbatore: பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. காவல் ஆய்வாளர், மருத்துவர் நேரில் ஆஜராக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு

Marimuthu M HT Tamil Published Apr 09, 2025 05:14 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 09, 2025 05:14 PM IST

Coimbatore: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிந்த அலுவலர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் நேரில் ஆஜராகி, அந்த ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Coimbatore: பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. காவல் ஆய்வாளர், மருத்துவர் நேரில் ஆஜராக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு
Coimbatore: பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. காவல் ஆய்வாளர், மருத்துவர் நேரில் ஆஜராக கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு

மேலும், எதிர்தரப்பில் 2 சாட்சிகளை விசாரணை செய்யக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை பொறுத்தவரை, அரசு சாட்சியம் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் அரசு தரப்பு சாட்சியம் மூலம் கேள்வி விசாரணை நடத்தப்பட்டது. இரு விசாரணையும் நடந்துமுடிந்த நிலையில் தற்போது இவ்வழக்கு இறுதிகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் வீடியோ கால் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்றைய தினத்தில் எதிர்தரப்புக்கு வாய்ப்பு வழங்கவே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இதுவரைக்கும் அரசு தரப்பில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதுவும் மறுப்புத் தெரிவிக்கும் வகையில், சாட்சிகள் ஏதேனும் இருக்கின்றதா என்பது தொடர்பான வாய்ப்பு வழங்கல் தான் விசாரணையில் பிரதானமாக இருந்தது. இன்றைய விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் 7 பேருக்கு எந்த சாட்சியங்களும் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட இருவர் தரப்பு சார்பிலான விசாரணையில் உத்தரவு

இந்த வழக்கில் 5ஆவதாக குற்றம்சாட்டப்பட்ட மணிவண்ணன், ஆறாவதாக குற்றம்சாட்டப்பட்ட பாபு ஆகிய இருவர் தரப்பில் தங்களிடம் சாட்சிகள் இருப்பதாகவும், தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை விசாரிக்கும்படியும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை சமர்ப்பித்து, அவர்களையும் ஆஜர் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

மேலும் இவ்வழக்கு தொடர்பான இன்னொரு வழக்கு கடந்த 2021ஆம் ஆண்டே முடித்து வைக்கப்பட்டு இருந்திருந்தது.

வழக்கு ஒத்திவைப்பு எப்போது?:

ஆனால் அந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர் மற்றும் அந்த வழக்கின் மருத்துவ ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறும் தான் குற்றம்சாட்டம்பட்ட இருவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீது கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்த உத்தரவில் சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை பதிந்த அலுவலர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் நேரில் ஆஜராகி, அந்த ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஐ விசாரிக்கும் இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார், நீதிபதி நந்தினி