Madurai AIIMS: ’கோவை நூலகம்! மதுரை எய்ம்ஸ் மாதிரி செய்ய மாட்டோம்!’ வானதியை கலாய்த முதல்வர்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madurai Aiims: ’கோவை நூலகம்! மதுரை எய்ம்ஸ் மாதிரி செய்ய மாட்டோம்!’ வானதியை கலாய்த முதல்வர்

Madurai AIIMS: ’கோவை நூலகம்! மதுரை எய்ம்ஸ் மாதிரி செய்ய மாட்டோம்!’ வானதியை கலாய்த முதல்வர்

Kathiravan V HT Tamil
Published Feb 22, 2024 02:48 PM IST

”வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அந்த நூலகம் திறக்கப்படும். அந்த நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நிச்சயமாக அழைப்பு வரும்”

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதம் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், இறுதி நாளான இன்று உறுப்பினர்களுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர்களுக்கு பதில் அளித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதற்கு வாழ்த்துகள். பாஜகவை சேர்ந்த திருமதி வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கையில், கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அது எங்கே அமைய போகிறது, எப்போது முடிப்பீர்கள், எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளீர்கள் என கேள்வி கேட்டார். 

அந்த பணி உடனடியாக செயல்பாடுக்கு வரும். ஏனென்றால் இந்த ஆட்சி சொன்னதை செய்யும், சொல்வதைத்தான் செய்யும். எப்படி மதுரையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதோ, சென்னையில் கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறு தழுவதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதோ, இன்னும் சில தினங்களில் கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதே போல் கோவையில் நூலகமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். 

மதுரையில் எம்ய்ஸ் அறிவித்ததை போல் அல்லாமல்; குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த நூலகம் கட்டி முடிக்கப்படும். வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அந்த நூலகம் திறக்கப்படும். அந்த நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நிச்சயமாக அழைப்பு வரும், கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.