Delimitation: ’சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழப்போம்’ கூட்டுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Delimitation: ’சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழப்போம்’ கூட்டுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

Delimitation: ’சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழப்போம்’ கூட்டுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Published Mar 22, 2025 11:20 AM IST

”2 ஆண்டுகாலமாக மணிப்பூர் பற்றி எரிகிறது. அதனால் நீதிக்கான அவர்கள் குரல்கள் புறக்கணிக்கப்படுகிறது. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை குறைவது, அல்லது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நமது அரசியல் வலிமை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும்”

Delimitation: ’சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழப்போம்’ கூட்டுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!
Delimitation: ’சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழப்போம்’ கூட்டுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தொடங்கி உள்ளது. இக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். 

அத்தனை பேருக்கும் நன்றி 

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்து இருப்பது இக்கூட்டத்தில் மாபெரும் சிறப்பு. எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்.  பல்வேறு மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து உள்ளீர்கள்.

இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு உள்ளோம் என்பதை இந்தியாவுக்கு உணர்த்துவதாக உங்கள் வருகை அமைந்து உள்ளது. இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியை காக்க நாம் ஒன்று கூடி உள்ளோம். இந்த முன்னெடுப்பில் இணைந்து உள்ள அத்தனை பேருக்கும் நன்றி. 

கூட்டாட்சி கொண்ட ஒன்றியம் 

பல்வேறு மாநிலங்களில் இருந்து நாம் ஒன்று கூடி உள்ளோம். நமது மாநிலத்தில் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டது. பல்வேறு மொழிகள், இனங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், உணவுகள், பழக்க வழக்கங்கள் கொண்டதுதான் இந்தியா. இத்தகைய மாநிலங்கள் சுயாட்சி தன்மை உடன் செயல்பட்டால்தான் இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி உருவாக்க முடியும். அனைத்து தரப்பு மக்களும் போராடிதான் நமது நாட்டுக்கு விடுதலை கிடைத்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுத்த மேதைகள் இந்தியாவை கூட்டாட்சி கொண்ட ஒன்றியமாக கட்டமைத்தார்கள். பல்வேறு காலகட்டத்தில் கூட்டாட்சி தன்மைக்கு சோதனை வந்தாலும் அதனை ஜனநாயக அமைப்புக்கள், இயக்கங்கள் தடுத்து வந்து உள்ளன. அத்தகைய சோதனைதான் தற்போதும் வந்து உள்ளது.

பிரதிநிதித்துவத்தை இழப்போம்  

என்னை பொறுத்தவரை இந்திய கூட்டாட்சியை காக்கும் மிக முக்கிய நாளாக இந்த நாள் அமைய போகிறது. வரவிருக்கும் சென்சஸ் அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுசீரமைப்பு என்பது நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது. மக்கள் தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்திய நம்மை போன்ற மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை அதிகம் இழக்க நேரிடும். எனவே நாம் இதை கடுமையாக எதிர்க்க வேண்டிய காலத்தில் உள்ளோம். 

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் பயனுள்ள மக்கள் தொகை கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டி உள்ளன.  இத்தகைய மாநிலங்களை தண்டிப்பதாக இந்த நடவடிக்கை இருக்க போகிறது. மக்கள் பிரதிநிதிகள் என்ண்ணிக்கை குறைந்தால், நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறைகிறது. 

மணிப்பூரை சுட்டிக்காட்டி பேச்சு 

2 ஆண்டுகாலமாக மணிப்பூர் பற்றி எரிகிறது. அதனால் நீதிக்கான அவர்கள் குரல்கள் புறக்கணிக்கப்படுகிறது. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை குறைவது, அல்லது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நமது அரசியல் வலிமை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும். இது வெறும் எண்ணிக்கையை பற்றியது மட்டுமல்ல. நமது அதிகாரம், உரிமைகள், எதிர்கால நலன் பற்றியது.

சொந்த நாட்டில் அதிகாரம் இழப்போம் 

பிரதிநிதித்துவம் குறைவதால் நமது மாநிலங்கள் தேவையான நிதியை பெற போராட வேண்டி வரும். நமது விருப்பம் இல்லாமல் நமக்கான சட்டங்கள் வடிவமைக்கப்படும். நமது மக்களை பாதிக்கும் முடிவுகள் நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவு, மாணவர்கள் முக்கிய வாய்ப்பை இழப்பது, உழவர்கள் ஆதரவின்றி பின் தங்குவது, சமூகநீதி பாதிப்பு, பட்டியலின, பழங்குடிமக்கள் பாதிப்பு உண்டாகும்.

நம் சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும். ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் நந்த நடவடிக்கை ஆனது நியமான அரசியல் பிரதிநித்த்துவத்தை பாதிக்க கூடாது என முதலமைச்சர் கூறினார்.