சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் திடீர் மறைவு.. முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் திடீர் மறைவு.. முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் திடீர் மறைவு.. முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்!

Karthikeyan S HT Tamil
Published May 07, 2025 04:26 PM IST

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் திடீர் மறைவு.. முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் திடீர் மறைவு.. முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்!

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி J. சத்ய நாராயண பிரசாத் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரைஇழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய தனது தந்தையின் வழியில் சட்டத்துறையை தேர்வு செய்து, வழக்கறிஞராகி, அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பான வழக்குகளிலும் திறம்பட வாதிடும் திறமை படைத்தவர்.

வழக்கறிஞராக நீண்ட அனுபவத்துடன் 2021-இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். நீதித்துறையில் மேலும் தனது சிறந்த பங்களிப்பை, சாதனைகளைப் படைக்க வேண்டிய தருணத்தில் நிகழ்ந்து விட்ட அவரது எதிர்பாராத மறைவு நீதித்துறைக்கும் - நீதி பரிபாலன முறைக்கும் பேரிழப்பாகும்.

தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாருக்குக் காவல்துறை அணிவகுப்புடன் கூடிய இறுதி மரியாதை செலுத்தப்படும். பணியில் இருக்கும் நீதிபதி ஒருவரை இழந்து வருந்தும் சக நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சத்தியநாராயண பிரசாத் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நீதித்துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.