Manaparai Accident : மணப்பாறை கோர விபத்து.. 5 பேர் உடல் நசுங்கி பலி..ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!
மணப்பாறை அருகே அரசு பேருந்தும், காரும் மோதிய விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் 25 பேருக்கு மேல் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுமார் 20 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,”திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி கிராமம் லெட்சம்பட்டி பிரிவு ரோடு அருகே, திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் கிராமம் தேசிய ரோடு அருகே, நெடுஞ்சாலையில் இன்று (25-6-2023) மாலை திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில்