‘இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் பிரம்மாண்ட பேரணி!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
”இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை போற்றவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும் இந்த பேரணி நடத்தப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் திரளாக பங்கேற்று ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்”

‘இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் பிரம்மாண்ட பேரணி!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நாளை (மே 10, 2025) மாலை 5 மணிக்கு மாபெரும் போர் பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி
பாகிஸ்தானின் அத்துமீறல்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக வீரத்துடன் போராடி வரும் இந்திய ராணுவத்திற்கு ஒற்றுமை மற்றும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு சென்னை கலங்கரை விளக்கம் பகுதிக்கு அருகே உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருந்து தொடங்கும் இந்த பேரணி, காமராஜர் சாலை வழியாக சென்று, தீவு அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் நிறைவு பெறும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.