இரண்டு சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர்.. நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இரண்டு சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர்.. நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!

இரண்டு சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர்.. நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!

Aarthi Balaji HT Tamil
Published Jun 03, 2025 05:05 PM IST

கன்னியாகுமரி: தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர்.. நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!
இரண்டு சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர்.. நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!

இவர் தினமும் காலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வது வழக்கம். அதன்படி நேற்று ( ஜூன் 2) ஆற்றில் தடுப்பணை பகுதியில் குளிக்க சென்று இருந்தார். அப்போது அங்கு மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 17 வயதாகும் மனோ , மதிலகத்தை சேர்ந்த மாணவன் அகிலேஷ் ஆகியோர் ஆற்றின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு தடுப்பணை வழியாக நடந்து சென்றனர்.அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் வழுக்கி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்தனர்.

இதை கண்ட பீட்டர், இருவரையும் கரைக்கு ஏற்றிவிட்ட நிலையில் அவர் வெள்ளத்தில் பீட்டர் சிக்கி கொண்டார். எதிர் நீச்சலடிக்க முடியாமல் அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது.இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளத்தில், " கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களை, அவ்வழியே சென்ற பீட்டர் என்பவர் தன் உயிரை துச்சமென எண்ணி, மாணவர்களைக் காப்பாற்றி, தன் இன்னுயிரை நீத்துள்ளார்.

தத்தளிக்கும் மாணவர்களை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காத்திட்ட பீட்டர் அவர்கள், தமிழக மக்களின் உயரிய மானுடவிய விழுமியத்தின் உதாரணம்.

இறந்தாலும் அனைத்தையும் கொடுக்கும் வாழை போல், தன் உயிரைத் தியாகம் செய்திடினும், அவர் காத்திட்ட இரு மாணவர்களின் வழியே பீட்டர் அவர்கள் நிச்சயம் வாழ்வார்!" எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி உயிரிழந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.