செங்கோட்டையன் முன்பு மோதிக்கொண்ட அதிமுகவினர்.. ஈரோடு செயல்வீரர்கள் கூட்டத்தில் அடிதடி.. பறந்து வந்த சேர்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  செங்கோட்டையன் முன்பு மோதிக்கொண்ட அதிமுகவினர்.. ஈரோடு செயல்வீரர்கள் கூட்டத்தில் அடிதடி.. பறந்து வந்த சேர்கள்!

செங்கோட்டையன் முன்பு மோதிக்கொண்ட அதிமுகவினர்.. ஈரோடு செயல்வீரர்கள் கூட்டத்தில் அடிதடி.. பறந்து வந்த சேர்கள்!

Karthikeyan S HT Tamil
Published Mar 05, 2025 12:42 PM IST

ADMK Meeting: ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவினர் கடும் மோதல்.. செயல்வீரர்கள் கூட்டத்தில் அடிதடி.. பறந்த சேர்கள்!
செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவினர் கடும் மோதல்.. செயல்வீரர்கள் கூட்டத்தில் அடிதடி.. பறந்த சேர்கள்!

மேலும், இந்த கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர், பவானிசாகர் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரூர், நகர, வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.பூத் கமிட்டி அமைப்பது மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

திடீரென வெடித்த வாக்குவாதம்

இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசி கொண்டிருந்த போது அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி பிரவீன் என்பவர் எழுந்து இவ்வளவு பெரிய கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் நிர்வாகிகளுக்கு கட்சியில் இருந்து உரிய முறையில் அழைப்பு விடுப்பதில்லை. எந்த தகவலும் எங்களுக்கு சொல்லப்படுவதில்லை என்ற புகாரை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதிமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு

உடனடியாக புகார் தெரிவித்த அந்தியூர் நிர்வாகியை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் பேசினார். அப்போது செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பிரவீனை சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை செங்கோட்டையனிடம் பேசவிடாமல் தடுத்து அங்கிருந்து வெளியே இழுத்து செல்லும் முயற்சியில் சில நிர்வாகிகள் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவினர் இடையே ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். அங்கு இருந்த சேர்களும் தூக்கி வீசப்பட்டது .

செங்கோட்டையன் விளக்கம்

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறும் பொழுது அந்தியூரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இ.எம் .ஆர் ராஜா தான் இந்த பிரச்சனைக்கு ஒரு நபரை அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு, இ.எம்.ஆர் ராஜா தான் காரணம் எனவும் பரபரப்பு குற்றம் சாட்டினார். அதற்கு தகுந்த ஆடியோ சிடி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் கேள்வி கேட்ட அந்த நபரை அதிமுக உறுப்பினர்கள் அடித்து விரட்டியது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் தொடரும் சலசலப்புகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அத்திக்கடவு - அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் வைக்கப்படவில்லை என்பதால் பங்கேற்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர்ப் பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறாதது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.