‘ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் தந்தை பெரியார் உருவப்படம்’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு பதிவு!
‘சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற Oxford பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைக்கிறேன்’

ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் தந்தை பெரியார் புகைப்படத்தை திறந்து வைக்கப் போவதாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக, அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இதோ:
உலகமயமாகிறார் பெரியார்!
"ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற Oxford பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.
