‘தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் சுதர்சன் ரெட்டி’ முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
அரசியலமைப்புச் சட்டத்துக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், முற்போக்காகவும், மக்களுக்காகவும் பேசுகின்ற இவரை நாம் முன்மொழிய, இதைவிட பெரிய காரணம் தேவையா?

சென்னையில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து, முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசியதாவது:
சுதர்சன் ரெட்டி அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற நீதியரசராக பணியாற்றிய அவர், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுதிவாய்ந்தவர். அதனால்தான், இந்தியா கூட்டணி சார்பில், உங்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்! உங்களை ஒருமனதாக தேர்ந்தெடுத்து அறிவித்த இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்தியா கூட்டணியினர் மட்டுமில்லை, ஜனநாயகத்தின் மீது மக்களாட்சித் தத்துவத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அத்தனை பேரும் உங்களைத்தான் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!
தென் மாநிலத்தைச் சேர்ந்த இவருடைய Profile-யை எல்லோரும் கவனிக்கவேண்டும். உஸ்மானியா யூனிவர்சிட்டியில் சட்டம் பயின்று, 1971-ல் வழக்கறிஞராக ப்ராக்டிஸ் செய்ய தொடங்கினார். பின்னர், ஆந்திர மாநில அரசு வழக்கறிஞர், ஒன்றிய அரசின் கூடுதல் நிலை ஆலோசகர், ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்று படிப்படியாக தன்னுடைய career-ல் முன்னேறி, மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து, இன்றைக்கு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார்.
