MK Stalin: ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதைவிட ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் என்னுடைய இலக்கு! முதலமைச்சர் ஸ்டாலின்!
பொறுத்தவரையில், ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதைவிட ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் என்னுடைய இலக்கு! அதற்காக தான் இந்தியாவையே திரும்பிப் பார்க்கின்ற திட்டங்களை செய்கிறோம்.

சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வெறும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை இல்லை, அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைபாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை!
விழுப்புரத்தில் வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இட்ட பணியை தட்டாமல் செய்து முடிப்பதுதான் தன்னுடைய ஒரே வேலை என்று வாழ்ந்த ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு கழக அரசு மணிமண்டபம் அமைப்பதும், அதை நான் திறந்து வைப்பதும் எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை!
திமுக ஆட்சியின் வரலாறு!
அடுத்து, 21 சமூகநீதிப் போராளிகளுக்கு நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமுதாய மக்கள் தங்களின் சமூகநீதி உரிமையைக் கேட்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போராடியபோது, காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 1987-ஆம் ஆண்டு இது நடந்தது. வன்னிய சமுதாய மக்களின் கோரிக்கைக்கு அன்றைக்கு அ.தி.மு.க. அரசு செவிமடுக்கவில்லை. 1989-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர், “திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனி ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்வோம்; என்று வாக்குறுதி கொடுத்தார். சொன்னதுபோல், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த 43-ஆவது நாளில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்த வரலாறுதான் கலைஞருடைய வரலாறு! திமுக ஆட்சியின் வரலாறு!