ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Karthikeyan S HT Tamil
Published Jun 25, 2025 02:24 PM IST

இந்திய ரயில்வே ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வில் ஓர் அங்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலமாக வேலூர் சென்றார். அப்போது ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைய பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்திய ரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!

இன்று காட்பாடி செல்ல ரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.

பிரதமர் மோடியையும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.

ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.