Rain Update: அடடா… மழைடா… 2 நாட்களுக்கு மழை!
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தென் தமிழ்நாடு பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்," மார்ச் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் கிழக்கு திசை காட்சி வேகம் மாறுபாடு காரணமாகத் தென் தமிழ்நாடு மாவட்டங்களிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய உள்ளது.
ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும்.
மார்ச் ஐந்தாம் தேதி அன்று தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மார்ச் 6 மற்றும் ஏழாம் தேதி அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானில் நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகக் காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 இல் இருந்து 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்