செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி? நடந்தது என்ன? - சென்னை கமிஷனர் அதிரடி விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி? நடந்தது என்ன? - சென்னை கமிஷனர் அதிரடி விளக்கம்!

செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி? நடந்தது என்ன? - சென்னை கமிஷனர் அதிரடி விளக்கம்!

Karthikeyan S HT Tamil
Published Mar 26, 2025 02:44 PM IST

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி என்பது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.

செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி? நடந்தது என்ன? - சென்னை கமிஷனர் அதிரடி விளக்கம்!
செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி? நடந்தது என்ன? - சென்னை கமிஷனர் அதிரடி விளக்கம்!

நகைப்பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக தகவல் வந்தவுடன் சோதனை தொடங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தே வழிப்பறி கொள்ளையர்களை நெருங்கினோம். விமானத்தில் பயணிக்க கடைசி நேரத்தில் யாரேனும் டிக்கெட் வாங்கினார்களா என்று விசாரணையை துவங்கினோம்.

செயின் பறிப்பில் ஈடுபடுவதற்காக நேற்று அதிகாலையில்தான் இருவர் சென்னை வந்துள்ளனர். 3ஆவது நபர் முன்கூட்டியே சென்னை வந்து அனைத்து பகுதிகளையும் நோட்டமிட்டு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் குற்றச்செயலுக்குப் பயன்படுத்திய பைக்கை அடையாளம் காட்ட தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்து சென்றோம். அப்போது அங்கே அவர்கள் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது சுட்டனர்.

போலீசாரை நோக்கி இரண்டு முறை கொள்ளையர் சுட்டதில், காவல்துறை வாகனத்தின் மீது குண்டு பாய்ந்தது. தற்காப்புக்காக ஒருமுறை மட்டுமே காவல்துறையினர் சுட்டதில் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த வடமாநில கொள்ளையன் ஜாஃபர் இரானி என்பவர் உயிரிழந்தார். கொள்ளையர்கள் உடைகளை மட்டும் மாற்றிக்கொண்டார்கள். ஷூவை மாற்றவில்லை அதை வைத்து எளிதாக அவர்களை அடையாளம் காண முடிந்ததது. மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்பதும் மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே உள்ள அம்பிவேலிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.