வானிலை: ‘ இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு’ - சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வானிலை: ‘ இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு’ - சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்

வானிலை: ‘ இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு’ - சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்

Marimuthu M HT Tamil Published Apr 24, 2025 03:03 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 24, 2025 03:03 PM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை: ‘ இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு’ - சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்
வானிலை: ‘ இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு’ - சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்

இதுதொடர்பாக தென்மண்டல சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,''தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

24-04-2025 மற்றும் 25-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26-04-2025 முதல் 30-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

24-04-2025 முதல் 26-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று வெப்பநிலை உயரக்கூடும்.

27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

24-04-2025 முதல் 26-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

24-04-2025 முதல் 26-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (24-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (25-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்:

24-04-2025 முதல் 28-04-2025 வரை: மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை''என வானிலை அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.