வானிலை: ‘ இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு’ - சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை: ‘ இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு’ - சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தென்மண்டல சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,''தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
24-04-2025 மற்றும் 25-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.