Chennai: சாலையில் சுற்றி திரியும் மாடுகள்..சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai: சாலையில் சுற்றி திரியும் மாடுகள்..சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை!

Chennai: சாலையில் சுற்றி திரியும் மாடுகள்..சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை!

Karthikeyan S HT Tamil
Published Oct 26, 2023 09:26 AM IST

சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்தால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித் துள்ளார்.

 சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சிப் பணியாளர்கள், திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சாலையில் சுற்றி திரிந்த 16 மாடுகளைப் பிடித்து, பராமரிப்பு மையத்தில் அடைத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவல்துறையுடன் இணைந்து மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில், பூக்கடை பகுதியில் 120 மாடுகள், பழைய வண்ணாரப் பேட்டையில் 3, புளியந்தோப்பில் 48, அண்ணாநகரில் 269, கொளத்தூரில் 12, கோயம்பேட்டில் 513, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்பகுதியில் 367, கீழ்ப்பாக்கத்தில் 95, அடையாறில் 177, தி-நகரில் 145 என மாநகரம் முழுவதும் 1,986 மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதாகக் கண்டறிந் திருக்கிறோம்.

மாடுகளைப் பிடிக்கச் சென்றால், மாநகராட்சி பணியாளர்களை மிரட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த பிரிவின் கீழும், அரசு அலுவலரை பணி செய்ய விடாமல்தடுத்ததற்காகவும் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்."இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.