12 வயதில் பாலியல் வன் கொடுமை.. 10 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சிறுமி.. சினிமாவை மிஞ்சும் க்ரைம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  12 வயதில் பாலியல் வன் கொடுமை.. 10 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சிறுமி.. சினிமாவை மிஞ்சும் க்ரைம்

12 வயதில் பாலியல் வன் கொடுமை.. 10 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சிறுமி.. சினிமாவை மிஞ்சும் க்ரைம்

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 21, 2025 11:14 AM IST

சென்னை: பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 வயதில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தன்னை மற்றும் தனது தாயைப் பாதுகாக்க 10 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார்.

12 வயதில் பாலியல் வன் கொடுமை.. 10 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சிறுமி.. சினிமாவை மிஞ்சும் க்ரைம்
12 வயதில் பாலியல் வன் கொடுமை.. 10 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சிறுமி.. சினிமாவை மிஞ்சும் க்ரைம் (Meta Ai)

2015ல் நடந்த சம்பவம் என்ன?

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, இந்த சம்பவம் 2015 ஆம் ஆண்டில் நடந்தது. 12 வயது சிறுமி சென்னையில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவர்களது வீட்டு உரிமையாளரின் 41 வயதான மருமகன், அந்த சிறுமி மீது தவறான எண்ணம் கொண்டான். 2015 பிப்ரவரி 7 ஆம் தேதி அந்த சிறுமியை கடத்தி, சென்னையிலிருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றான். அங்கு ஒரு ஹோட்டலில் அவளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

இதற்கிடையில், சென்னையில் சிறுமியின் உறவினர்கள் அவள் காணாமல் போனதாக புகார் அளித்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிறுமி தனது வீட்டிற்கு வந்து, தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயிடம் கூறினாள். தாய் அவளை அழைத்துச் சென்று போலீசில் புகார் அளித்தார். ஆனால் பின்னர், யாருக்கும் புரியாத சில நிகழ்வுகள் நடந்தன.

குடும்பத்தோடு வெளியேறி சிறுமி

தங்கள் பாதுகாப்புக்காக, குடும்பம் சென்னையை விட்டு வெளியேறி, சிறுமி தனது தாயுடன் ஒரு கிராமத்தில் வசிக்கத் தொடங்கினர். ஆனால் குற்றவாளி அப்பாஸ் அலி அவர்களை அங்கு கண்டுபிடித்து, சென்னைக்குத் திரும்பவோ அல்லது நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவோ கூடாது என்று மிரட்டியுள்ளான். சிறுமி மற்றும் அவளது தாய் அங்கிருந்து தப்பித்தனர். தங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய, தாய்-மகள் இருவரும் கூலி வேலை செய்யத் தொடங்கினர்.

இந்த நேரத்தில், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது, மேலும் மாநிலத்தின் அனைத்து பெண்கள் போலீசாரும் அவர்களைத் தேடி வந்தனர். கடந்த ஆண்டு அவர்கள் அந்த தாய்-மகளை கண்டுபிடித்தனர்.

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்

அரசு வழக்கறிஞர் அனிதாவின் கூற்றுப்படி, சிறுமிக்கு முழுமையான பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டாள். தற்போது 22 வயதான அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த சம்பவத்தைச் சொல்ல ஆரம்பத்தில் தயங்கினாள். ஆனால் பின்னர், 12 வயதில் தனக்கு நேர்ந்த கொடுமையை அவள் விவரித்தாள்.

சிறுமியின் சாட்சியம் மற்றும் பத்து ஆண்டுகளாக அவளுக்கு நேர்ந்த மன மற்றும் பொருளாதார துன்பங்களை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அப்பாஸ் அலிக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், அரசு சிறுமிக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.