Today Gold Rate: சர்ரு சர்ருனு விலை ஏறும் தங்கம்.. ஒரே நாளில் சவரனுக்கு 640 அதிகரித்ததால் பெண்கள் அதிர்ச்சி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Gold Rate: சர்ரு சர்ருனு விலை ஏறும் தங்கம்.. ஒரே நாளில் சவரனுக்கு 640 அதிகரித்ததால் பெண்கள் அதிர்ச்சி!

Today Gold Rate: சர்ரு சர்ருனு விலை ஏறும் தங்கம்.. ஒரே நாளில் சவரனுக்கு 640 அதிகரித்ததால் பெண்கள் அதிர்ச்சி!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 16, 2024 10:12 AM IST

Today Gold Rate:Today Gold Rate: இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது. ஈரான் இஸ்ரேல் போரால் தங்கத்தின் விலை மேலும அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்ரு சர்ருனு விலை ஏறும் தங்கம்.. ஒரே நாளில் சவரனுக்கு 640 அதிகரித்ததால் பெண்கள் அதிர்ச்சி!
சர்ரு சர்ருனு விலை ஏறும் தங்கம்.. ஒரே நாளில் சவரனுக்கு 640 அதிகரித்ததால் பெண்கள் அதிர்ச்சி!

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 16) சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ரூ.54,960-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து ரூ.6,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 15) சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து ரூ.54,320-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய் குறைந்து ரூ.6,790-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி விலை இன்று (ஏப்.16)  கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.90.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.90,500-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி விலை நேற்று (ஏப்.15) கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.89,500-க்கு விற்பனையாகிறது.

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சீன, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மக்களும், நகைப்பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர முதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. இன்றைய தங்கம் விலைதங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.