Coimbatore: கிறிஸ்தவ போதகர் மீது போக்சோ வழக்கு.. வீட்டிற்கு வந்த சிறுமிகளிடம்.. கோவையில் அதிர்ச்சி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: கிறிஸ்தவ போதகர் மீது போக்சோ வழக்கு.. வீட்டிற்கு வந்த சிறுமிகளிடம்.. கோவையில் அதிர்ச்சி!

Coimbatore: கிறிஸ்தவ போதகர் மீது போக்சோ வழக்கு.. வீட்டிற்கு வந்த சிறுமிகளிடம்.. கோவையில் அதிர்ச்சி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 07, 2025 06:49 PM IST

Coimbatore: சிறுமிகள், வீட்டிற்கு வரும்போது எல்லாம் கிறிஸ்தவ போதகர் ஜான் ஜெபராஜ் பலமுறை பாலியல் ரீதியாக அவர்களுக்கு தொல்லை செய்ததாகவும், இந்த விவரத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

Coimbatore: கிறிஸ்தவ போதகர் மீது போக்சோ வழக்கு.. வீட்டிற்கு வந்த சிறுமிகளிடம்.. கோவையில் அதிர்ச்சி!
Coimbatore: கிறிஸ்தவ போதகர் மீது போக்சோ வழக்கு.. வீட்டிற்கு வந்த சிறுமிகளிடம்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் என்ற சர்ச்சில் மத போதகராக பணியாற்றி வருபவர் ஜான் ஜெபராஜ். 32 வயதான இவர், இவர் கேரளாவில் மத போதகம் செய்து வந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் விழா ஒன்று நடந்துள்ளது.

அந்த விழாவின் போது, தனது மாமனாரால் தத்து எடுக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும், அச்சிறுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து உள்ளது.

சிறுமிகள், வீட்டிற்கு வரும்போது எல்லாம் கிறிஸ்தவ போதகர் ஜான் ஜெபராஜ் பலமுறை பாலியல் ரீதியாக அவர்களுக்கு தொல்லை செய்ததாகவும், இந்த விவரத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள், மத போதகரின் தொடர் தொல்லை குறித்து தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர்.

இதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், கோவை மத்திய போலீசார் கிறிஸ்தவ போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது போல் மற்றவர்களுக்கும் அவரால் ஏதாவது பாலியல் தொல்லை நடந்ததாக? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.