Budget 2025: தமிழ்நாடு என்றாலே ஓரவஞ்சனைதானா? மக்களை ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் - மு.க. ஸ்டாலின் கருத்து
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Budget 2025: தமிழ்நாடு என்றாலே ஓரவஞ்சனைதானா? மக்களை ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் - மு.க. ஸ்டாலின் கருத்து

Budget 2025: தமிழ்நாடு என்றாலே ஓரவஞ்சனைதானா? மக்களை ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் - மு.க. ஸ்டாலின் கருத்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 01, 2025 05:48 PM IST

MK Stalin on Budget 2025: நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது என மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என்றாலே ஓரவஞ்சனைதானா? மக்களை ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் - மு.க. ஸ்டாலின் கருத்து
தமிழ்நாடு என்றாலே ஓரவஞ்சனைதானா? மக்களை ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் - மு.க. ஸ்டாலின் கருத்து

அதாவது "நாடு என்பது மண்ணை மட்டும் குறிப்பது அல்ல. மக்களையே குறிக்கும்" என்பது தான் அதன் பொருள். இதன் அடிப்படையில் நம்து வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் பட்ஜெட் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையாகவும், வழக்கம்போல் மக்களை ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவில், "ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?

நெடுஞ்சாலைகள் - இரயில்வே திட்டங்கள் - கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது?

முதன்மை இடத்தை பெறும் தமிழ்நாடு புறக்கணிப்பு

பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?

தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும், மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?

மாநில அரசு நிதிச்சுமை அதிகரிக்கிறது

ஒன்றிய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டுக்கு மட்டும் விதித்துள்ளது.

விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது.

 

பாம்மாத்து நாடகம் தொடர்கிறது

வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது.

எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.