லாட்டரி மார்ட்டின் மகன் பிறந்தநாள் விழா பணியில் இருந்த பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  லாட்டரி மார்ட்டின் மகன் பிறந்தநாள் விழா பணியில் இருந்த பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை!

லாட்டரி மார்ட்டின் மகன் பிறந்தநாள் விழா பணியில் இருந்த பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 27, 2025 08:59 AM IST

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியாக, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயிலில் இருந்து பிறந்தநாள் ஊர்வலம் தொடங்க இருந்தது. இதற்கான ஏற்பாடு பணிகளில் உமாசங்கர் இரவு முழுவதும் ஈடுபட்டு வந்தார்.

லாட்டரி மார்ட்டின் மகன் பிறந்தநாள் விழா.. பணியில் தீவிரமாக இருந்த பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை!
லாட்டரி மார்ட்டின் மகன் பிறந்தநாள் விழா.. பணியில் தீவிரமாக இருந்த பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் எட்டு வழக்குகளில் வழிப்பறி, பாலியல் தொழில், கொலை, வழக்குகளில் தொடர்புடையவர் கருவடிக்குப்பம் சேர்ந்த உமாசங்கர். லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் இருக்கும் இவர், புதுச்சேரி பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவ்வப்போது தலைமுறைவாகவும் தமிழகத்தில் தஞ்சம் புகுந்து இருந்து வருகிறார்.

மார்ட்டின் மகன் பிறந்தநாள் விழாவில் மும்முரம்

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இவரை கொலை செய்வதற்காக சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்ததாக தெரிகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் விழா புதுச்சேரி முழுவதும் மிகப் பிரமாண்ட அளவில் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஏற்பட்டில் முதல் நிகழ்ச்சியாக கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் இருந்து பிறந்தநாள் ஊர்வலம் தொடங்க இருந்தது. இதற்காக ஏற்பாடு பணிகளை உமாசங்கர் இரவு முழுவதும் ஈடுபட்டு வந்தார். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு மேல் சாமிப்பிள்ளை தோட்டம் ஜிஞ்சர் ஹோட்டல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சராமரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர்.

நள்ளிரவில் குவிந்த ஆதரவாளர்கள்

இதில் முகம், கை, உடல் முழுவதும் வெட்டுப்பட்டு உடலின் பாகங்கள் சிதைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

அதற்க்குள், கொலையான சம்பவத்தைத் தெரிந்து, அப்பகுதியில் இருக்கக்கூடிய உறவினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள், பாஜகவினர் ஆகியோர் சம்பவ இடத்தில் குவிந்ததால், பதட்டமான சூழல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அனைவரையும் அப்புறப்படுத்தி பிரேதத்தை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்துவிட்டு தப்பித்து சென்ற குற்றவாளிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் கருவடிக்குப்பம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. கொலையானவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் முன்விரோதம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.