அமைச்சர் PTR வாகனத்தில் செருப்பு வீசிய பெண் தலை துண்டிக்கப்பட்டு வெட்டிக் கொலை! போலீஸ் தீவிர விசாரணை!
”கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் என்பவர் இறந்துவிட்ட நிலையில், சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன்(வயது45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்”

மதுரையை சேர்ந்த பாஜக பெண் பிரமுகர் பட்டுக்கோட்டையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தில் செருப்பு எறிந்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மத்திய தொகுதி பாஜக பெண் பிரமுகர்
மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பிரமுகர் சரண்யா, பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் பகுதியில் திருமணம் ஆகி வந்து அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு அவரது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வரும் பாலன் என்பவரது மனைவி சரண்யா (வயது35) நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.