’யார் புகார் தருகிறார்களோ அவர்கள் மீதே போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது!’ திமுக அரசை சாடும் நயினார் நாகேந்திரன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’யார் புகார் தருகிறார்களோ அவர்கள் மீதே போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது!’ திமுக அரசை சாடும் நயினார் நாகேந்திரன்!

’யார் புகார் தருகிறார்களோ அவர்கள் மீதே போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது!’ திமுக அரசை சாடும் நயினார் நாகேந்திரன்!

Kathiravan V HT Tamil
Published May 06, 2025 01:11 PM IST

"நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா, வேறு எங்காவது இருக்கிறோமா என்ற பதற்றமான சூழல் உள்ளது" என்று அவர் கவலை தெரிவித்தார்.

’யார் புகார் தருகிறார்களோ அவர்கள் மீதே போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது!’ திமுக அரசை சாடும் நயினார் நாகேந்திரன்!
’யார் புகார் தருகிறார்களோ அவர்கள் மீதே போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது!’ திமுக அரசை சாடும் நயினார் நாகேந்திரன்!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாகவும், திமுக ஆட்சியில் கொலைகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

"திமுக ஆட்சியில் படுகொலைகள் தொடர்கின்றன"

நயினார் நாகேந்திரன், "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து படுகொலைகள் நடக்கின்றன. பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று கூறினார். மேலும், சிவகிரி சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கொங்கு பகுதியில் மக்கள் அச்சத்துடன் வெளியூர் செல்வதாகவும் தெரிவித்தார். "பல்லடத்தில் 7 கொலைகள் கஞ்சா போதையால் நடந்துள்ளன. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர், ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை" என்று அவர் விமர்சித்தார்.

"கொள்ளையர்கள் தமிழகத்தில் உள்ளனர்"

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் காரணமாக கொலைகள் நடப்பதாகக் குறிப்பிட்ட நயினார், "வங்காளதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது" என்று குற்றம்சாட்டினார். "நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா, வேறு எங்காவது இருக்கிறோமா என்ற பதற்றமான சூழல் உள்ளது" என்று அவர் கவலை தெரிவித்தார். கொங்கு பகுதியில் கோடை விடுமுறைக்கு வந்தவர்கள் கூட அச்சத்தால் திரும்பிச் செல்வதாகவும், முதல்வர் இதில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

மதுரை ஆதீனம் விவகாரம் 

மதுரை ஆதீனம் விவகாரத்தில், "காவல் நிலையத்தில் வழக்கு தொடுப்பவர்களை முதலில் திமுக பிடிக்கிறது. அதுபோலவே இந்த விவகாரமும் நடந்துள்ளது" என்று நயினார் குறிப்பிட்டார். மேலும், "நாங்கள் மதப் பிரச்சினைகள் குறித்து பேசவில்லை. ஆனால், சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக முதல்வர் எங்களை மதம் குறித்து பேசுவதாக தூண்டிவிடுகிறார்" என்று குற்றம்சாட்டினார்.

"ஜபார் போன்று பலர் எங்களுக்கு வாக்களிப்பார்கள்"

அதிமுக-பாஜக கூட்டணியைப் பாராட்டியதற்காக சிடிசி ஜபார் என்பவர் ஜமாப் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய நயினார், "அது ஜமாத்தின் நடவடிக்கை, அதை நாங்கள் குறை கூற முடியாது. ஆனால், ஜபார் போன்று பல்வேறு ஜபார்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார். இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ வாக்குகளும் பாஜகவுக்கு கிடைக்கும் என்று அவர் கூறினார்.