’யார் புகார் தருகிறார்களோ அவர்கள் மீதே போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது!’ திமுக அரசை சாடும் நயினார் நாகேந்திரன்!
"நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா, வேறு எங்காவது இருக்கிறோமா என்ற பதற்றமான சூழல் உள்ளது" என்று அவர் கவலை தெரிவித்தார்.

’யார் புகார் தருகிறார்களோ அவர்கள் மீதே போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது!’ திமுக அரசை சாடும் நயினார் நாகேந்திரன்!
யார் காவல் துறையிடம் புகார் அளிக்கிறார்களோ அவர்கள் மீதுதான் போலீஸ் நடவடிக்கை எடுப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாகவும், திமுக ஆட்சியில் கொலைகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் கடுமையாக விமர்சித்தார்.