மும்மொழிக் கொள்கை: ‘இந்தி கற்பிக்க ஆசிரியர்கள் இல்லையா?’ தமிழக அரசுக்கு ஐடியா கொடுக்கும் அண்ணாமலை
திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.

மூன்றாவது மொழியை கற்பது தொடர்பாக அரசு பள்ளி மாணவர்களிடம் கருத்து கணிப்பு எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் எடுத்து சென்று வருகிறார். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. 1968ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் கல்விக் கட்டமைப்பில் மும்மொழிக் கொள்கை முதுகெலும்பாக விளங்குகிறது. தமிழ் உட்பட ஒவ்வொரு மொழியையும் தேசிய கல்விக் கொள்கை மூலம் உரிய இடத்தை பெற உறுதி செய்வதே நோக்கம். தேசியக் கல்விக் கொள்கை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.