Annamalai: பெண் IPS அதிகாரியை எரித்துக் கொல்ல சதி! ஸ்டாலினின் இரும்புக்கரம் என்ன செய்கிறது தெரியுமா? விளாசும் அண்ணாமலை!
சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

தன்னை எரித்துக் கொலை செய்ய சதி நடந்ததாக ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றம்சாட்டி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
விசாரணை நடத்தாதது ஏன்?
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்திருந்தால், அவர் உயிரையும் இழந்திருக்க நேர்ந்திருக்கும். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை தமிழகக் காவல்துறை புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஏன்?