’குழந்தைகள் தைரியமாக திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்’ அண்ணாமலை ஆவேச பேச்சு!
”பணம் உள்ளவர்களுக்கு ஒரு நியாயம், பணம் இல்லாதவர்களுக்கு ஒரு நியாயம். இதை மாற்ற வேண்டும். ஆன்மீகத்தை முன்வைத்து ஆட்சி நடக்க வேண்டும்”

நமது குழந்தைகள் தைரியமாக திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
இந்து முன்னணி ஏற்பாடு செய்த முருகன் மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ். மூத்த உறுப்பினர்கள், ஆன்மீகவாதிகள் பங்கேற்றனர்.
இந்து சமுதாயத்தின் குரல்
இந்த மாநாட்டில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,"நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இந்த மண்ணில் இந்து மதத்திற்காக உயிர் தியாகம் செய்த தானுலிங்க நாடார், ராமகோபாலன், ராஜகோபால், ஆடிட்டர் ரமேஷ், சசிகுமார் உள்ளிட்ட தலைவர்களின் கண்ணீர் துளிகள் இந்த மாநாட்டில் பிரதிபலிக்கின்றன," என்று அண்ணாமலை பேசினார். இந்து மதத்தை பின்பற்றுவோருக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்த அவர், "இது ஒரு சாதாரண கூட்டமல்ல; இந்து சமுதாயத்தின் குரலை உரக்க ஒலிக்கச் செய்யும் எழுச்சி மாநாடு," என்றார்.