’விஜய்யின் மாணவர் சந்திப்பு குறித்த வேல்முருகனின் ஆபாச பேச்சு!’ தமிழிசை கண்டனம்!
”தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக தமிழிசை குற்றம்சாட்டினார்”

’விஜய்யின் மாணவர் சந்திப்பு குறித்த வேல்முருகனின் ஆபாச பேச்சு!’ தமிழிசை கண்டனம்!
விஜய் நடத்தும் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி குறித்த வேல்முருகனின் ஆபாச கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து, தமிழகத்தில் திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சட்டம்-ஒழுங்கு மோசம், போதைப் பொருள் புழக்கம், மருத்துவமனைகளில் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பாதிப்பால் நடத்தப்படவில்லை என்றும், 2027 மார்ச்சில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழிசை தெரிவித்தார். தமிழகத்தில் இடங்களை குறைப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டுவது வெறும் புரளி என்று அவர் விமர்சித்தார்.