’அமித்ஷாவின் மதுரை வருகை! மாறப்போகும் தமிழக அரசியல்’ உடைத்து பேசும் நயினார் நாகேந்திரன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அமித்ஷாவின் மதுரை வருகை! மாறப்போகும் தமிழக அரசியல்’ உடைத்து பேசும் நயினார் நாகேந்திரன்!

’அமித்ஷாவின் மதுரை வருகை! மாறப்போகும் தமிழக அரசியல்’ உடைத்து பேசும் நயினார் நாகேந்திரன்!

Kathiravan V HT Tamil
Published Jun 05, 2025 04:45 PM IST

”மதுரையில் கால் ஊன்றுகிறார். அது மட்டுமல்ல, அது ஆலமரமாக முளைத்து பசுஞ்சோலையாக மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்”

’அமித்ஷாவின் மதுரை வருகை! மாறப்போகும் தமிழக அரசியல்’ உடைத்து பேசும் நயினார் நாகேந்திரன்!
’அமித்ஷாவின் மதுரை வருகை! மாறப்போகும் தமிழக அரசியல்’ உடைத்து பேசும் நயினார் நாகேந்திரன்!

சரஸ்வதி எம்எல்ஏ மகள் மறைவுக்கு இரங்கல்

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மகள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த நயினார் நாகேந்திரன், “அவரது குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபத்தை தெரிவிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறினார்.

பெங்களூரு ஐபிஎல் நெரிசல்: 11 பேர் உயிரிழப்பு

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு நயினார் இரங்கல் தெரிவித்தார். இதில் திருப்பூரைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண்ணும் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார். “கர்நாடக ஆளுங்கட்சி சரியாக ஏற்பாடு செய்யாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியின்போது இதைவிட பெரிய நிகழ்வு பாதுகாப்பாக நடத்தப்பட்டது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

திமுக அரசு மீது விமர்சனம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டிய நயினார், “தர்மபுரி மாவட்டத்தில் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்ற விவசாயி மனு பெறப்படாததால் தீக்குளிக்க முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசு உரிய உதவி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் பணமாக 300-400 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படவில்லை என்று நயினார் குற்றம்சாட்டினார். “திமுக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விவசாயிகளை வஞ்சிக்கிறது. தமிழக அரசு தனது பதவிக்காலம் முடியும் வரை விவசாயிகளுக்கு உதவ வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

வேல்முருகன் பேச்சு: உள்கட்சி பிரச்சினை

விஜய் குறித்த வேல்முருகனின் அநாகரிக பேச்சு குறித்து கருத்து தெரிவித்த நயினார், “யாரும் தரக்குறைவாக பேசக்கூடாது என்றார்.

ராமதாஸை ஆடிட்டர் குரு மூர்த்தி சந்தித்து உள்ளது குறித்த கேள்விக்கு, உள்கட்சி பிரச்சினை. அப்பா-மகன் பிரச்சினையை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக குருமூர்த்தி சென்றது தனிப்பட்ட முயற்சி. இதற்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

அமித் ஷா வருகை: பாஜகவின் அடுத்தகட்ட திட்டம்

ஜூன் 8 அன்று மதுரை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை குறித்து பேசிய நயினார், “முதலமைச்சர் ஸ்டாலின், அமித் ஷா தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்று கூறினார். ஆனால், அவர் மதுரையில் கால் ஊன்றுகிறார். அது மட்டுமல்ல, அது ஆலமரமாக முளைத்து பசுஞ்சோலையாக மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.