"தைரியமாக இருங்கள்.. நீதியை நிலைநாட்ட அதிமுக துணை நிற்கும்" அஜித்குமார் தாய்க்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  "தைரியமாக இருங்கள்.. நீதியை நிலைநாட்ட அதிமுக துணை நிற்கும்" அஜித்குமார் தாய்க்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்

"தைரியமாக இருங்கள்.. நீதியை நிலைநாட்ட அதிமுக துணை நிற்கும்" அஜித்குமார் தாய்க்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்

Pandeeswari Gurusamy HT Tamil
Published Jul 02, 2025 04:11 PM IST

இன்று எடப்பாடி பழனிச்சாமி அஜித் குமாரின் தாயிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார்.

டிரெண்டிங் ஆகும் அஜித்குமார் மரணம்.. நீதி கேட்டு எக்ஸ் தளத்தில் குவியும் பதிவுகள்!
டிரெண்டிங் ஆகும் அஜித்குமார் மரணம்.. நீதி கேட்டு எக்ஸ் தளத்தில் குவியும் பதிவுகள்!

அஜித் குமார் குடும்பத்திற்கு ஆறுதல்

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அஜித் குமாரின் தாயிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் கூறிதாவது, "துரதிஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதால் உங்களது மகன் அஜித்குமார் மரணமடைந்தார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுடன் இருக்கும். இது மீள முடியாத துயரம். தாய் தனது மகனை இழப்பது மிகப்பெரிய கொடுமையான விஷயம். இதை யாராலும் மன்னிக்க முடியாதது இது பெற்ற தாய்க்கு தான் அந்த வலி தெரியும். நீங்கள் மனம் தளராமல் இருங்கள். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. நீங்கள் நிம்மதியாக இருந்தால்தான் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடுத்துள்ளோம் நீதி நிலைநாட்டப்படும் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் மனம் தளராதீர்கள் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் இந்த நிகழ்வு மேலும் முடியாதது ஒரு கொடுமையான சம்பவம் நடந்து முடிந்துள்ளது உங்களுடைய மகனின் இறப்பிற்கு யார் யாரெல்லாம் காரணமோ அவர்கள் தண்டிக்கப்படும் வரை அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். தைரியமாக இருங்கள்" என்று கூறினார்.