சென்னையில் பதுங்கி வியாபாரம் செய்த வங்கதேசத்தினர்! மொத்தமாக தட்டி தூக்கிய போலீஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னையில் பதுங்கி வியாபாரம் செய்த வங்கதேசத்தினர்! மொத்தமாக தட்டி தூக்கிய போலீஸ்!

சென்னையில் பதுங்கி வியாபாரம் செய்த வங்கதேசத்தினர்! மொத்தமாக தட்டி தூக்கிய போலீஸ்!

Kathiravan V HT Tamil
Published Apr 28, 2025 03:00 PM IST

சென்னையில் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டினர் கைது செய்யபட்டு கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் பதுங்கி வியாபாரம் செய்த வங்கதேசத்தினர்! மொத்தமாக தட்டி தூக்கிய போலீஸ்!
சென்னையில் பதுங்கி வியாபாரம் செய்த வங்கதேசத்தினர்! மொத்தமாக தட்டி தூக்கிய போலீஸ்!

சென்னையின் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி குடும்பமாக வசித்து வந்த இவர்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி காவல்துறையின் தீவிர சோதனை

வங்கதேச நாட்டவர்கள் சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக டெல்லி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இவர்கள் குடிசைகளில் குடும்பமாக வசித்து வந்தது கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள், மாங்காடு அருகிலுள்ள கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விசாரணையில் வெளியான தகவல்கள்

கைது செய்யப்பட்டவர்கள், சென்னையில் தங்கியிருந்த காலத்தில், பெரிய வாகனங்களைப் பயன்படுத்தி பழைய பொருட்களை சேகரித்து கடைகளுக்கு விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி எவ்வாறு இத்தனை நாட்கள் தங்கியிருந்தனர், எந்த வழியாக சென்னைக்கு வந்தனர், மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

பாதுகாப்பு மற்றும் பரபரப்பு

கைது செய்யப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மண்டபத்தைச் சுற்றி கடும் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை, இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து ஆழமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.