இனி குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை -தமிழக அரசு!
தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலும் கோயில் நிகழ்ச்சிகளின்போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. கோயில் திருவிழாக்களின் போது ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகள், குறவன் குறத்தி நடனம் ஆகியவை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவ்வாறு நடத்தப்படும் நடனங்கள் ஆபாசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் பெரும்பாலான கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில், குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக புகார் எழுந்தது. மேலும் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், குறவன், குறத்தில் ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறியவந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழகத்தில் குறவன் குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்