Teacher Training Application : மாணவர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் பயிற்சிக்கு ஜூன் 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
Teacher Trainig Application : தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டயப்பயிற்சியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூன் 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. அவற்றிற்கான முடிவுகள் அண்மையில் வெளியாகிய நிலையில், அனைத்து வகை உயர்கல்வி நிலையங்களில் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், பாலிடெக்னிக், இதர பயிற்சி வகுப்புகள் என மாணவர்கள் அவர்களின் திறமை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப உயர் கல்விகளை தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.
இது ஓருபுறம் இருக்க தேர்வில் தோற்ற மாணவர்களுக்கு சிறப்பு உடனடி தேர்வுகளுக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடக்கல்வி ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது - எஸ்சிஇஆா்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் 2023 – 24ம் கல்வியாண்டுக்கான 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி மாணவா் சோக்கை நடைபெறவுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை இணையதளத்தின் மூலம் விண்ணப்பதாரா்கள் அறிந்துகொள்ளலாம்.
மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் ஜூன் 5ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவ்வாறு இயலாத நிலையில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரா்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களைபின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான்டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்