Sarathkumar: ’மனைவியிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது?’ பாஜகவுடன் இணைந்தது குறித்த கேள்விக்கு சரத்குமார் டென்ஷன்!
”Sarathkumar: 37 ட்விட்களை போட்டு திமுகவினர் விமர்சிக்கின்றனர். கலைஞர் மறைவுக்கு கூட இப்படி ட்வீட் போடவில்லை என சரத்குமார் கூறினார்”

பாஜகவில் இணைந்த நடிகர் சரத் குமார் செய்தியாளர் சந்திப்பு
மனைவியிடம் கருத்து கேட்காமல் வேறு யாரிடம் கருத்து கேட்பார்கள் என பாஜகவில் தனது கட்சியை இணைத்த நடிகர் சரத் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
தனது கட்சியை பாஜகவில் இணைத்துள்ள நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 22 ஆண்டுகள் எனது அரசியல் பயணத்தில் 16 ஆண்டுகள் சமத்துவ மக்கள் கட்சி தலைவராக பயணித்துக் கொண்டிருந்தேன். 1996ஆம் ஆண்டு அன்று இருந்த ஆட்சியை அகற்ற திமுக-தமாகாவுக்கு தேர்தல் பரப்புரை செய்தேன். அப்போதே என்னால் 25 சீட்டுகள் கேட்டிருக்க முடியும்; ஆனால் நான் அதை கேட்கவில்லை. இன்றைக்கு மோடி அவர்கள் மூன்றாவது முறை பிரதராக வர வேண்டும் என்ற அடிப்படையில் இணைப்பு விழா நடைபெற்றுள்ளது என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
பாஜகவின் முன்னோடிகள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வோம்; அவர்கள் சில கருத்துகளை வைத்துள்ளனர்.