மதுரை வந்த அமித்ஷா.. சென்னையில் ஒட்டப்பட்ட மர்ம பேனர்கள்.. எதிர்ப்பு தெரிவிப்பது யார்?
நேரடியாக பாஜகவுக்கு சவால்விடும் நோக்கில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களில், யார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை. அதே போல, எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் அமித்ஷா வருகைக்காக வைக்கப்பட்ட பேனராக இது தெரிகிறது.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான அமித்ஷா மதுரை வந்துள்ள நிலையில், பல இடங்களில் ப்ளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ‘டெல்லி படையெடுப்புக்கு ஒரு போதும் தமிழ்நாடு வீழாது’ என்ற வாசகமும், மற்றொரு பேனரில், ‘எங்க தமிழ்நாடு எப்பவுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான்’ என்றும் குறிப்பிட்டு சென்னையின் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக பாஜகவுக்கு சவால்விடும் நோக்கில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களில், யார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை. அதே போல, எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் அமித்ஷா வருகைக்காக வைக்கப்பட்ட பேனராக இது தெரிகிறது.
பேனரில் குறிப்பிடப்பட்டுள்ள இரு வாசகங்களும், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் சமீபத்திய பேச்சில் இடம் பெற்ற வசனங்கள் என்பது மட்டும் உறுதியாகிறது. திமுகவின் பாஜக எதிர்ப்பின் எதிரொலியாக தான், இந்த பேனர் வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. மதுரையில் இன்று, அமித்ஷா பல்வேறு வியூகங்களையும், சந்திப்புகளையும் நடத்தவிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.