Veeramuthuvel: ‘இனி விண்வெளியிலும் AI தொழில்நுட்பம் தான்’ - ‘சந்திராயன் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு!
விண்வெளித்துறையில் இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக இருக்கும். விண்வெளியில் உள்ள பயன்பாடற்ற செயற்கைக்கோள்களை, பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டுவந்து அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளது - விருதுநகரில் -சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு!

வீரமுத்துவேல்!
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்று வரும் "காஃபி வித் கலெக்டர்" கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கலந்து கொண்டு விண்வெளிப் பயணம் என்ற தலைப்பில் சந்திராயன்-3 உருவான விதம் குறித்து சிறப்புரையாற்றினார்.