'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி
”தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?”

'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி
'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பி உள்ளார்.
பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன’’ எனச் சொல்லியிருக்கிறார்.