JoeMichel : யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அப்சரா வழக்கு - ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோட் உத்தரவு!
அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு யூடியூபர் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை பரப்பியதாக, அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா சென்னை உயர்நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்சராவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. யூடியூபில் கருத்துகளை வெளியிட உரிமை உள்ளது என்றாலும் தனிப்பட்ட நபரின் உரிமையில் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூடியூபர் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது என்று அப்சரா ரெட்டி புகார் தெரிவித்திருந்தார். அப்சரா ரெட்டிக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.