தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Announcement Board Mentioned As Area Hindus Only Living Made Into Controversy Near Coimbatore

கோவை அருகே 'இந்துக்கள் வாழும் பகுதி' என்ற அறிவிப்பு பலகையால் எழுந்த சர்ச்சை!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 17, 2022 09:09 PM IST

இந்துக்கள் வாழும் பகுதி என குறிப்பிட்டு கோவை அருகே உள்ள கிராம பகுதி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே காடுவெட்டிபாளையத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையால் எழுந்த சர்ச்சை
கோவை அருகே காடுவெட்டிபாளையத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையால் எழுந்த சர்ச்சை

ட்ரெண்டிங் செய்திகள்

இங்கு இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி. இங்கு மத பிரச்சாரங்கள் செய்யவும், மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. இதை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஊர் பொதுமக்கள் சார்பில் குறிப்பிட்டு அந்த அறிவிப்பு பலகையில் வாசகங்கள் இடம்பிடித்துள்ளன.

ஆனால் காடுவெட்டிபாளையம் ஊராட்சி மன்றத்துக்கு தெரியாமலும், முறையான அனுமதி பெறாமலும் குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்களால் இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகையால் அந்த பகுதியில் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

அனைத்து மதத்தினரும் வாழும் அந்தப் பகுதியில் தற்போது இந்த அறிவிப்பு பலகை குறித்தான புகைப்படங்கள் வாட்ஸ்அப் உள்பட சமூக வலைத்தளங்களில் பரவி, இதுதொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

IPL_Entry_Point