’ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கூண்டுக் கிளியாக உள்ளேன்!’ மத்திய அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்!
கூட்டணி விவகாரங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதாகவும், தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

நமக்கான காலம் வரும்போது பறக்க ஆரம்பிப்போம், தற்போது கூண்டுக்கிளியாக இருப்போம் என மத்திய அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்து உள்ளார்.
திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர்களை சந்தித்தார்.
சட்டம் ஒழுங்கு நிலை குறித்த கடும் விமர்சனம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து, அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். மாநிலத்தின் பல பகுதிகளில் நிகழும் குற்ற சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார். கொங்கு பகுதியில் வீடு புகுந்து விவசாயிகள் கொல்லப்படுவது, தென் தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் நடைபெறுவது, சென்னையில் கூலிப்படை தாக்குதல்கள் அதிகரிப்பது என பல பிரச்சினைகளை எடுத்துரைத்தார். "தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுமே கொலை காடுகளாக மாறிவிட்டன," என்று கவலை தெரிவித்த அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊட்டியில் இருந்து பேசுவதாகவும், சென்னையின் வெயிலுக்கு வந்தால் அவருக்கு உண்மை நிலை புரியும் என்றும் கூறினார். மேலும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக 2026ல் மக்கள் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
