‘தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா?’ திமுகவை விளாசும் அண்ணாமலை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா?’ திமுகவை விளாசும் அண்ணாமலை!

‘தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா?’ திமுகவை விளாசும் அண்ணாமலை!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 22, 2025 11:36 AM IST

‘தொடர்ந்து தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நானும் எனது வீட்டின் முன்பாக, பாஜக நிர்வாகிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றேன்’

‘தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா?’ திமுகவை விளாசும் அண்ணாமலை!
‘தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா?’ திமுகவை விளாசும் அண்ணாமலை!

அதன் படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் நடந்தது. வீடுகளுக்கு முன் கருப்பு கொடிகளை ஏந்தி, பாஜகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில வீதிகளில் வந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னுடைய எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

‘‘காவிரி, முல்லைப் பெரியாறு என, தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழகத்தின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் இந்தி கூட்டணிக் கட்சியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும், திரு ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் தமிழக பாஜக சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகள் முன் நின்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நானும் எனது வீட்டின் முன்பாக, பாஜக நிர்வாகிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றேன்,’’

என்று அந்த எக்ஸ் தள பதிவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.