அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 90,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு விவரங்கள்
நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஞானசேகரன் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் தண்டனைக் குறைப்பு உள்ளிட்ட எந்தவொரு நிவாரணமும் கிடைக்காது.