நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்.. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்.. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்.. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

Karthikeyan S HT Tamil
Published May 28, 2025 11:57 AM IST

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்.. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
நீதிபதியிடம் கெஞ்சிய ஞானசேகரன்.. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

'கருணை காட்டக்கூடாது'

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரன், தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் கதறி அழுதுள்ளார். அவர் கோரிக்கை வைத்த நிலையில், ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும், கருணை காட்டக்கூடாது என அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்த் வாதத்தை முன்வைத்தார்.

'அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்' - காவல்துறை

குற்றவாளி ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்றும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கோரிக்கை வைத்த ஞானசேகரன்

தண்டனை விவரம் குறித்து ஞானசேகரனிடம் நீதிபதி கேட்டபோது, என் அப்பா இறந்துவிட்டார். நிறைய கடன் உள்ளது. வயதான தாய் இருக்கிறார். சகோதரியையும், மகளையும் கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனது தொழிலுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். என் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீக்க வேண்டும் என குற்றவாளி ஞானசேகரன் நீதிபதியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நடந்தது என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23 அன்று 19 வயதான 2 ஆம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை டிசம்பர் 24 அன்று கைது செய்தனர்.

எஃப்ஐஆர் வெளியாகி பரபரப்பு

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக எஃஐஆர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எஃப்ஐஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன. அதில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில், "நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தரவைப்பேன் என மிரட்டினார். செல்போனில் இருந்த எனது தந்தை மொபைல் நம்பரை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டினான். நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் அவர் எங்களை விடுவதாக இல்லை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினார். டிசி தரவைப்பேன் என கூறி எனக்கு. அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலு கட்டாயமாக என்னை பாலியல் வன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்தாக கூறப்படுகிறது.