Anna University issue: சிறுமி முதல் பாட்டி வரை! ஒருத்தர விடல! இதுவேற உள்ள நடந்து இருக்கா? ஈபிஎஸ் சொன்ன திகில் சம்பவம்!
Anna University issue: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறது என்பதுதான் மக்களின் சந்தேகமாக உள்ளது.

Anna University issue: சிறுமி முதல் பாட்டி வரை! ஒருத்தர விடல! இதுவேற உள்ள நடந்து இருக்கா? ஈபிஎஸ் சொன்ன திகில் சம்பவம்!
சிறுமிகள் முதல் பாட்டிக்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்
தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை உடன் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிகாக தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்தும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், தவாக தலைவர் வேல்முருகனும், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரை நியமனம் செய்யாததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
