Delimitation: 'ஸ்டாலின் அழைப்பை புறக்கணித்த ஆந்திர அரசியல் தலைவர்கள்!’ ஜகா வாங்கிய YSRCP, JSP கட்சிகள்! நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Delimitation: 'ஸ்டாலின் அழைப்பை புறக்கணித்த ஆந்திர அரசியல் தலைவர்கள்!’ ஜகா வாங்கிய Ysrcp, Jsp கட்சிகள்! நடந்தது என்ன?

Delimitation: 'ஸ்டாலின் அழைப்பை புறக்கணித்த ஆந்திர அரசியல் தலைவர்கள்!’ ஜகா வாங்கிய YSRCP, JSP கட்சிகள்! நடந்தது என்ன?

Kathiravan V HT Tamil
Published Mar 22, 2025 03:54 PM IST

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டுக் குழு கூட்டத்தில் யாரும் பங்கேற்காத நிலையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நியாமான முறையில் மேற்கொள்ள சொல்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Delimitation: 'ஸ்டாலின் அழைப்பை புறக்கணித்த ஆந்திர அரசியல் தலைவர்கள்!’ ஜகா வாங்கிய YSRCP, JSP கட்சிகள்! நடந்தது என்ன?
Delimitation: 'ஸ்டாலின் அழைப்பை புறக்கணித்த ஆந்திர அரசியல் தலைவர்கள்!’ ஜகா வாங்கிய YSRCP, JSP கட்சிகள்! நடந்தது என்ன?

கூட்டுக்குழு கூட்டம் 

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர்மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சி மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

மேலும் படிக்க:- ’தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் 12 தொகுதிகளை இழப்போம்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் 

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதலமைச்சர்  ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர்  பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, அமர் பட்நாயக், பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தள கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம், கேரள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சலாம், கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், கேரள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன், தெலங்கானா அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் இம்தியாஸ் ஜலில், கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி, தெலங்கானா மாநில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட், கேரளா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

மேலும் படிக்க:- Revanth Reddy: ’தென்னிந்தியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறும் அபாயம்!’ தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை

மம்தா பானர்ஜிக்கு நேரில் அழைப்பு இல்லை

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு திமுக தரப்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஆந்திராவில் இருந்து யாரும் வரவில்லை

ஆனால் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தார். மேலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பெல்லா சீனிவாச ராவை சந்தித்தும் அழைப்புவிடுக்கப்பட்டது. மேலும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் திமுக சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் ஆந்திராவில் இருந்து எந்த கட்சித் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் தொடக்கத்திலேயே வெளியாகி இருந்தது. 

கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்

இருப்பினும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சார்பில் மிதுன் ரெட்டி, ஜனசேனா கட்சியில் இருந்து உதய ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் என திமுக தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. அவர்களை வரவேற்கவும் விமான நிலையத்தில் திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இறுதி நேரத்தில் இவர்களின் வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் விமர்சித்து வரும் நிலையில், சென்னை கூட்டுக் குழு கூட்டத்தில் ஜனசேனா கட்சி பிரதிநிதி பங்கேற்பதாக வெளியான தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி இக்கூட்டத்தை புறக்கணித்த நிலையில், பவன்கல்யாண் கட்சியும் புறக்கணித்து உள்ளது. 

ஆந்திர அரசியல் நிலவரம் 

ஆந்திராவை பொறுத்தவரை தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகள் பாஜக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும், பாஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டாத கட்சியாக இருந்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நியாமான முறையில் மேற்கொள்ள சொல்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.