TN BSP New President: ஆம்ஸ்ட்ராங் மரணம் எதிரொலி! பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக ஆனந்த் தேர்வு!
TN BSP New President: ஆம்ஸ்ட்ராங் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் அவருக்காக ஆஜராகி எல்லா வழக்குகளில் இருந்தும் அவரை விடுவித்தவர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக ஆனந்த் தேர்வு!
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் புதிய தலைவராக ஆனந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
யார் இந்த ஆனந்த்?
2006ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங் உடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சியில் பயணித்த வழக்கறிஞர் ஆனந்த், 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர்.