‘பொள்ளாச்சி குற்றவாளிகளில் 3 கட்சிகளை சேர்ந்தவர்கள்.. ஒரு கட்சி பெயர் மட்டும் ஏன் வருகிறது?’ பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘பொள்ளாச்சி குற்றவாளிகளில் 3 கட்சிகளை சேர்ந்தவர்கள்.. ஒரு கட்சி பெயர் மட்டும் ஏன் வருகிறது?’ பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி

‘பொள்ளாச்சி குற்றவாளிகளில் 3 கட்சிகளை சேர்ந்தவர்கள்.. ஒரு கட்சி பெயர் மட்டும் ஏன் வருகிறது?’ பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி

Stalin Navaneethakrishnan HT Tamil
Published May 14, 2025 09:07 AM IST

‘அன்று போராட்டிய மகளிர் சங்கங்கள் கூட, பாதிக்கப்பட்ட பெண்ணை வந்து சந்திக்கவில்லை என்பது தான் எங்களின் வருத்தம். பொள்ளாச்சியில் ரவுண்டான வரை போராட வந்த அரசியல்வாதிகள், அடுத்து 10 கி.மீ., தூரத்தில் இருந்த அந்த பெண்ணை சந்திக்க ஒருவர் கூட வரவில்லை’

‘பொள்ளாச்சி குற்றவாளிகளில் 3 கட்சிகளை சேர்ந்தவர்கள்.. ஒரு கட்சி பெயர் மட்டும் ஏன் வருகிறது?’ பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி
‘பொள்ளாச்சி குற்றவாளிகளில் 3 கட்சிகளை சேர்ந்தவர்கள்.. ஒரு கட்சி பெயர் மட்டும் ஏன் வருகிறது?’ பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி

பொள்ளாச்சி வழக்கு இரண்டாக நடந்தது

‘‘பொள்ளாச்சி வழக்கையை இரு வழக்காக பார்க்க வேண்டும். ஒன்று பாலியல் வழக்கு, மற்றொன்று பாலியல் வழக்கைத் தொடர்ந்து நடந்த அடிதடி வழக்கு. அடிதடி வழக்கில் ஜாமினில் வந்தது தான், மீடியாவின் இத்தனை பேச்சுகளுக்கு காரணம். பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளியே வந்ததைப் போல, ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். சம்மந்தப்பட்ட பெண் புகார் கொடுத்ததால், அந்த பெண்ணின் அண்ணனை இவர்கள் தாக்கினார்கள். அது இரண்டாவது எப்.ஐ.ஆர்., ஆகிறது. அந்த வழக்கில் தான், அவர்கள் கைதாகி ஃபெயிலில் வந்தார்கள். ஆனால், பாலியல் வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கும் போது, பாலியல் வழக்கில் அவர்கள் வெளியே வந்ததைப் போல பேசப்பட்டது.

பெண் குடும்பம் சார்பில் கோரிக்கை

பாலியல் வழக்கு, பாதிக்கப்பட்ட பெண்களின் துணிச்சலான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி. இதை வேறு யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது. எந்த கட்சி செய்தது, யார் ஆட்சியில் செய்யப்பட்டது என்பது தேவையில்லாத ஒன்று. இந்த விவகாரத்திற்காக குரல் கொடுத்ததாக கூறும் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், இதுவரை பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதில்லை. அதனால் அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் கூட, அந்த பெண்ணை ரகசியமாக சந்தித்து ஆறுதல் கூறவில்லை. இன்று அந்த பெண், திருமணமாகி நல்ல இடத்தில் செட்டில் ஆகிவிட்டார். இனி அவருக்கு ஆறுதல் தேவையில்லை. இனி யாரும் அந்த பெண் விஷயத்தை கூறி, கிரெடிட் எடுக்க கூடாது என்று, பெண் குடும்பத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அந்த முழு வெற்றி, முதன் முதலில் புகார் கொடுத்த பெண்ணுக்குத் தான் சேரும்.

அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சியினர்

அன்றிருந்த அதிமுக அரசு உடனே குண்டர் சட்டம் போட்டார்கள், சிபிசிஐடி.,க்கு கொடுத்தார்கள், பிறகு சிபிஐ.,யிடம் கொடுத்தார்கள். இந்த வழக்கில் மொத்தமுள்ள 9 பேரில், 4 பேர் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். அதில் 8 வது நபராக வரும் அருளானந்தம், அதிமுகவைச் சேர்ந்தவர். அவரை அப்போதே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு தான், கைது செய்யப்பட்டார்.

திருநாவுக்கரசு என்பவர், காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய நிர்வாகி. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், அன்றைய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக இருந்த மயூரா ஜெயக்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பைக் பாபு என்பவர், அசல் திமுகக்காரர். இப்போ இந்த குற்றவாளிகளில், அதிமுக, திமுக, காங்கிரஸ் என்று வகைப்படுத்த முடியாது. 9 பேரும் மனித மிருகங்கள்.

ஒரு கட்சியின் பெயர் மட்டும் வருகிறது

இன்று காலை செய்தி சேனல்களை பார்த்தேன், ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர் மட்டும் தான், அரசியல் அடையாளத்தோடு காட்டப்படுகிறது. அரசியல் அடையாளம் இந்த விவகாரத்தில் தேவையில்லை. எல்லா கட்சியை சேர்ந்தவர்களும், குற்றவாளிகளாக இருக்கிறார்கள். கடைசியின் நீதி தான் ஜெயித்திருக்கிறது, அந்த பெண் தான் ஜெயித்திருக்கிறார்.

அன்று போராட்டிய மகளிர் சங்கங்கள் கூட, பாதிக்கப்பட்ட பெண்ணை வந்து சந்திக்கவில்லை என்பது தான் எங்களின் வருத்தம். பொள்ளாச்சியில் ரவுண்டான வரை போராட வந்த அரசியல்வாதிகள், அடுத்து 10 கி.மீ., தூரத்தில் இருந்த அந்த பெண்ணை சந்திக்க ஒருவர் கூட வரவில்லை,’’

என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞரான கோபாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.