நாயாறு ஓடையில் வீணாகக் கடலில் கலக்கும் நீர்.. தடுப்பணை அமைத்தால் 2 ஒன்றியங்களுக்கு பயன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நாயாறு ஓடையில் வீணாகக் கடலில் கலக்கும் நீர்.. தடுப்பணை அமைத்தால் 2 ஒன்றியங்களுக்கு பயன்!

நாயாறு ஓடையில் வீணாகக் கடலில் கலக்கும் நீர்.. தடுப்பணை அமைத்தால் 2 ஒன்றியங்களுக்கு பயன்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 17, 2025 06:55 PM IST

வெண்ணத்தூர் பெரிய கண்மாய் நிறைந்த பிறகு, சம்பை, பத்தனேந்தல் ஆகிய இரண்டு பொதுப்பணித்துறை கண்மாய்க்கும், சின்னக் கோயில் கண்மாய் சித்தனேந்தல் ஆகிய இரண்டு யூனியன் கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

நாயாறு ஓடையில் வீணாகக் கடலில் கலக்கும் நீர்.. தடுப்பணை அமைத்தால் 2 ஒன்றியங்களுக்கு பயன்!
நாயாறு ஓடையில் வீணாகக் கடலில் கலக்கும் நீர்.. தடுப்பணை அமைத்தால் 2 ஒன்றியங்களுக்கு பயன்!

சித்திரையில் ஊற்றெடுக்கும் மடை நீர்

இராமநாதபுரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணத்தூர் டோல்கேட் பெரிய பாலம் வழியாக நாயாறு ஓடை செல்கிறது. வெண்ணத்தூர் கால்வாய் முகப்பில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் திருப்பாலைக்குடிக்கு தெற்கில் கடலில் கலக்கிறது. இன்று சித்திரை மாதம், நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட ஓடையில் ஊற்றெடுத்து ஒரு மடைத் தண்ணீர் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

கண்மாய் பகுதியில் ஆய்வு செய்த விவசாயிகள்
கண்மாய் பகுதியில் ஆய்வு செய்த விவசாயிகள்

இரண்டு ஒன்றியங்களுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பு

அந்த இடத்தில் ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை வெண்ணத்தூர் பொதுப்பணித்துறை பெரிய கண்மாய்க்கு கொண்டு செல்ல வேண்டும். வெண்ணத்தூர் பெரிய கண்மாய் நிறைந்த பிறகு, சம்பை, பத்தனேந்தல் ஆகிய இரண்டு பொதுப்பணித்துறை கண்மாய்க்கும், சின்னக் கோயில் கண்மாய் சித்தனேந்தல் ஆகிய இரண்டு யூனியன் கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே நாயாறு ஓடையில் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை பொதுப் பணித்துறை கண்மாய்களுக்கு பாசனத்திற்கு பயன்படுத்த தடுப்பணை கட்ட வேண்டும்,’ என்கிற கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

காவிரி வைகை குண்டாறு கிருதுமால் பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எம் அர்ச்சுணன், மாவட்டச் செயலாளர் முகவை மு மலைச்சாமி, ஒன்றிய அவைத் தலைவர் பி.அய்யாத்துரை (எ) சேதுராமன், ஒன்றிய செயலாளர் பெருவயல் ராமநாதன், வைகை கிராமம் குணசேகரன், தங்கப்பா , வெண்ணத்தூர் சேதுராமன், பாப்பனேந்தல் பத்மநாபன் உள்ளிட்ட விவசாயிகள் பலரும் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.