அஜித் குமார் மரணம்.. யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு! வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார் முதல்வர்!
அஜித்குமார் வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை CBI-க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். CBI விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்! என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் அஜித்குமார் என்பவரை, கோயிலுக்கு வந்த நிக்கி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருப்புவன் போலீசார் அடித்துக் கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிய கருப்பனின் செல்போன் வாயிலாக மறைந்த இளைஞர் அஜித் குமாரியின் தாய் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த காணொளியை தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ள ஸ்டாலின் , அதில், திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது.