‘இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!’ ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி!
“மும்பை அல்லது டெல்லிக்கு சென்று இந்தியைக் கற்றிருந்தால், இன்று நான் 10,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பை அடைந்திருப்பேன்”

‘இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!’ ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி!
தனக்கு இந்தி தெரிந்து இருந்தால் தற்போது 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரன் ஆகி இருப்பேன் என ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் தெரிவித்து உள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனர் சிவசங்கர், ரன்வீர் அலபாடியா நடத்திய பாட்காஸ்ட் ஒன்றில் தனது வாழ்க்கை அனுபவங்களையும், தொழில்முனைவு குறித்த மதிப்புமிக்க ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார். 68 வயதாகும் இவர், தனது 24ஆம் வயதில் தொடங்கிய முதல் தொழிலிலிருந்து இன்று வரையிலான பயணத்தை விவரித்தார். இளம் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் வகையில், வெற்றிக்கான தனது ரகசியங்களையும், வாழ்க்கையில் செய்த இரண்டு தவறுகளையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.