’தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை’ எல்.கே.சுதீஷ் பங்கிரங்க குற்றச்சாட்டு!
”இதற்கு மறுப்பு தெரிவித்த ஈபிஎஸ், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ராஜ்யசபா சீட் குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இல்லை என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார்”

’தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை’ எல்.கே.சுதீஷ் பங்கிரங்க குற்றச்சாட்டு!
தேமுதிக ராஜ்யசபா உறுப்பினர் பதவி ஒதுக்கப்படும் என்று அதிமுக உறுதியளித்தது உண்மைதான் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நேரம் வரும்போது மேலும் பேசுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்யசபா சீட் விவகாரம்
முன்னதாக தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி இருந்த நிலையில், எல்.கே.சுதீஷின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.